களுத்துறைக்கு அருகில் உள்ள ஹோட்டல்
ஒன்றின் அறையில் தங்கியிருந்த 22 சீனப் பிரஜைகள் கணினி குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அந்த ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஹோட்டலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களிடமிருந்த அனைத்துக் கணினிகள் மற்றும் துணைக்கருவிகளும் அறையில் வைத்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த அதே ஹோட்டலிலிருந்து சீனர்களை வெளியேற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இவர்கள் கணினி குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறியும் நோக்கில், கணினி குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.