1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 


(பாறுக் ஷிஹான்)

ஐஸ் போதைப்பொருளுடன்

கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (30) மாலை ஐஸ் போதைப்பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இறக்காமம் விசேட புலனாய்வு போலீஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இறக்காமம் பொலிஸ் பெறுப்பதிகாரி ஜே. எம்.மஹிந்த சேனரத்ன   வழிகாட்டலுக்கு அமைவாக விசேட புலனாய்வு பொறுப்பதிகாரி ஜே.எம். பி.கலந்தசூரிய தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போது  6 மில்லி 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்களான தாய் மற்றும் மகன்  கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில்  வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி