குடிவரவு - மற்றும் குடியல்வு
சட்டத்தை மீறி, வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்று, செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
பிணையில் உள்ள டயானா கமகே நீதிமன்றில் ஆஜராகிய நிலையிலே குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டு விசாரணை ஒக்டோபர் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.