வெல்லவாய ஊவா குடாஓயா
பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழுவொன்று ஊவா குடாஓயா பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து சூதாட்ட இடத்தை சோதனையிட்டனர்.
இதன்போது அங்கிருந்த சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை குடாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.