ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சாகர காரியவசம் சற்றும் பொருத்தமானவர் அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனவே, அந்தப் பதவிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரனவை நியமிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
மாத்தறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டக் குழுவினால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்தறை மாவட்ட பொதுஜன பெரமுனவின் முழுமையான ஆதரவை வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.