தலவாக்கலை - நுவரெலியா
வீதியின் லிந்துலை, பாம்ஸ்டன் பகுதியில் இன்று (02) பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான சொகுசு பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளாகி பஸ்ஸின் சாரதி உட்பட ஐவர் காயமடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மழையுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.