கொழும்பு, புறக்கோட்டை
பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பறித்து சில பக்கங்களை கிழித்து வீசிய ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் புறக்கோட்ட டைட்டஸ் கட்டிடத்துக்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த போது, தடை செய்யப்பட்ட பகுதியில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கச் சென்ற வேளையில் சாரதியின் மனைவியான ஆசிரியை, பொலிஸ் உத்தியோகத்தருக்குச் சொந்தமான சாரதி அனுமதிப்பத்திரத்தை வலுக்கட்டாயமாக பறித்து அதன் சில பக்கங்களை கிழித்து எறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதன்படி, பலவந்தமாக கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்துக்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.