1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பெலாரஸில் பொலிஸாரால்

கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் எனக் கூறப்படும் 'கஞ்சிபானி இம்ரான், லொக்கு பெட்டி மற்றும் ரொட்டம்பே அமில' ஆகியோரை உடனடியாக நாடு கடத்துவதற்கான இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து இந்தக் குற்றவாளிகளை அழைத்து வருவதற்கு தற்போது கலந்துரையாடி வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
'கிளப் வசந்த' கொலையின் மூளையாகக் கருதப்படும் இந்த மூன்று பாதாள உலக முக்கியஸ்தர்களும் பெலாரஸில் இருந்து பிரான்ஸுக்குத் தப்பிச் செல்லத் தயாராகியபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
'கிளப் வசந்த' படுகொலைச் சம்பவத்தின் பின்னர், இந்த மூன்று பாதாள உலகத் தலைவர்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் சர்வதேச பொலிஸாருக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்தது.
 
இந்தக் குற்றவாளிகள் தொடர்பில் தூதரகங்கள் ஊடாக இராஜதந்திர மட்டத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
 
அதன்படி, அந்நாட்டு விமான நிலையத்தில் பெலாரஸ் பொலிஸார 'பிக் பெட்டி'யை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிக் பெட்டி துபாயில் இருந்து பெலாரஸ் சென்று அங்கு 'கஞ்சிபான இம்ரானையும் ரொட்டம்பே அமிலையும்' சந்திக்க சென்றுள்ளார்.
 
'லோகு பெட்டி'யை கைது செய்து விசாரணை நடத்தியதில், 'கஞ்சிபான இம்ரான் மற்றும் ரொட்டம்பே அமில' என்ற குற்றவாளிகள் பற்றிய தகவல்களை பெலாரஸ் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
 
அப்போது சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீடும் பொலிஸாரால் சோதனையிடப்பட்டதுடன், பாதாள உலக தலைவர்கள் இருவரும் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
எனினும், பெலாரஸ் பொலிஸாரின் விசாரணையில், 'கஞ்சிபான இம்ரான் மற்றும் ரொட்டம்பே அமில' ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த மூன்று குற்றவாளிகளும் தற்போது பெலாரஸ் பொலிஸின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு நீண்ட நாட்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த மூன்று பாதாள உலகத் தலைவர்களையும் இலங்கைக்கு வரவழைத்து, அதற்கான சூழலை தயார் செய்து, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவை அங்கு அனுப்புவதற்கு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எவ்வாறாயினும், பாதாள உலக தலைவர் 'கஞ்சிபான இம்ரான்' கைது செய்யப்பட்டமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 
அவர் வேறு மாற்றுப் பெயர்களில் உள்ளதா என்பதும் தற்போது புலனாய்வுத் துறையினரின் கவனத்துக்கு வந்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி