தேர்தல் சட்ட விதிகளை மீறிய
மை தொடர்பில் 125 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான முறைப்பாடுகள் நியமனம், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பானவை.
இதேவேளை, தேர்தல் காலத்தில் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.