1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கண்டி, மாத்தளை வீதியில் வேன்

ஒன்றுக கு அருகில் கத்தியை வைத்திருந்த நபரை சோதனையிடும் போது உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரைக் கத்தியால் குத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர் .

46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கண்டி பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்புப் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் காரில் 119 கடமையில் ஈடுபட்டிருந்தபோதே  தாக்க முயற்சித்தமை தொடர்பில் முறைப்பாடு  ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது.
 
பின்னர், முறைப்பாட்டை விசாரிப்பதற்காக மாத்தளை பிரதேசத்தில் காரில் பயணித்தபோதுவேன் ஒன்று நிறுத்தப்பட்டு அதன் கதவுக்கு அருகில் கத்தியை வைத்திருந்த சந்தேக நபரை விசாரிக்க முயற்சித்த சப்-இன்ஸ்பெக்டரை  அவர் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி