தாம் அமைச்சரவையில்
இல்லையென்றால் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் என்ற ஒன்று இருக்காது எனவும் எதிர்காலத்தில் அனைத்து விடயங்களும் வெளிவரும் எனவும் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
விக்டரி விஷன் எனும் ஸ்ரீலங்கா அறக்கட்டளையில் இடம்பெற்ற விசேட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விஜேதாச ராஜபக்க்ஷ ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் உரையாற்றிய விஜேதாச ராஜபக்க்ஷ, எமது கட்சியின் ஆதரவின்றி எவரேனும் ஜனாதிபதியாக வர நினைத்தால் அது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு தேசிய ஜனநாயக முன்னணியினர் வரவேற்பு உரையை நிகழ்த்தியதோடு, அனைத்து மதத் தலைவர்களும் விஜேதாச ராஜபக்ஷவுக்கு தமது ஆசிகளை தெரிவித்தனர்.