ஜனாதிபதி தேர்தலில் தமது
கட்சி யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சியின் அரசியல்பீடம் கூடியே முடிவு செய்யும்.
இவ்வாறு தமிழ் லீடருக்கு தெரிவித்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்.
இது தொடர்ப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எவரையும் எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிக்க வேண்டிய தேவை எமக்கில்லை.
6 ஆம் திகதி எமது அரசியல் உயர்பீடம் கூடி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தீர்மானித்து அன்றைய தினம் எமது முடிவை வெளியிடுவோம் அல்லது இரண்டு தினங்கள் தாமதமாகி அறிவிப்போம்.
பிரதான இரு தரப்பினரும் பேச்சு வார்த்தைக்கு எம்மை அழைத்துள்ளனர் என்றார்.