ஒன்லைன் விசா' வழங்குவதை
இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், விசா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவை மதித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (2) தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுக் கொள்ளாததால், எதிர்கால நடவடிக்கை குறித்து உறுதியாகக் கூற முடியாது எனவும் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை விசா வழங்குவது தொடர்பில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாகவும், அவ்வாறு நடந்தால் நாட்டின் நற்பெயருக்கும், பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.