1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மீண்டும் கட்சி தீர்மானித்தால்

மட்டுமே தனி வேட்பாளரை முன்வைக்கும் முடிவை மாற்ற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

கட்சி எடுத்த தீர்மானத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு மாற்ற முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கோருவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தில் சந்தித்தார்.
 
இதனபோதே  முன்னாள் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
 
இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் மிகவும் சிநேகபூர்வமாக இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
 
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை மாற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி