150,000 ரூபா இலஞ்சம்
பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (02) மாலை வத்தளை மஹாபா நீதிமன்ற வாகன தரிப்பிடத்துக்கு முன்பாக உள்ள வீதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் சார்ஜன்டை கைது செய்துள்ளனர்.
மஹாபாகே பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய நடவடிக்கையின்போது மழவீட்டை சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக இவ்வாறு இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.