பாராளுமன்ற வீதியில் உள்ள
இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று (03) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த நான்கு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம்புலாவல பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள மரத்தில் மோதி பின்னர் மற்றுமொரு வேன் மீது மோதியுள்ளது.