1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்தத் தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் உயர்பீடம் இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க  பொதுஜன பெரமுன பிரதேச மக்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளதாகவும் இதன்போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
இதேவேளை, சாகர காரியவசம் அலல எவர் எந்தக் கடிதம் அனுப்பினாலும் அஞ்சப் போவதில்லை, ஜனாதிபதி இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவையினால்தான் நாங்கள் தீர்மானங்களை எடுத்தோம் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த கூறுகிறார். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி