ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு
ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் எத்தனை உறுப்பினர்கள் முன்வந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை திரும்பப் பெறப் போவதில்லை என கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்த தம்மிக்க பெரேரா, முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த சான்றிதழை வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது .
அதன்படி மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் நிச்சயமாக தயார் என பெரேரா வலியுறுத்தியுள்ளார் .