1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிளப் வசந்த உட்பட இருவரைக்

கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஜூலை 8ஆம் திபதி, அதுருகிரிய  பச்சை குத்தும் நிலையத்துக்குள் நுழைந்து  ரி56 துப்பாக்கியால் சுட்டதில் கிளப் வசந்த உட்பட  இருவர் கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் பலத்த காயமடைந்தனர்.
 
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களின் 3 புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
 
சந்தேக நபர்களின் விவரம்- 
 
01. முழுப்பெயர் – தருகர வருண இந்திக்க டி சில்வா அல்லது “சங்க”
 
தேசிய அடையாள அட்டை எண் – 951350753V
 
02. முழுப்பெயர் – பெட்டி ஹரம்பகே அஜித் ரோஹன அல்லது “சண்டி”
 
தேசிய அடையாள அட்டை எண் - 199207801772
 
03. முழுப்பெயர் - முதுவா துர தரிந்து மதுசங்க டி சில்வா அல்லது "ஜெனி"
 
மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
 
தொலைபேசி எண்
 
1. நிலையப் பொறுப்பதிகாரி குற்றப் பிரிவு மேல் மாகாண தெற்கு - 072-4222223 
 
2. நிலைய பொறுப்பதிகாரி, அதுருகிரிய பொலிஸ் நிலையம் - 071-8591657
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி