ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
4 மாவட்டங்களின் அமைப்பாளர் பதவிகள் மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கம்பஹா மாவட்ட அமைப்பாளராக இருந்த பிரசன்ன ரணதுங்கவுக்குப் பதிலாக இராஜாங்க அமைச்சர் இந்திய அனுருத்த, அநுராதபுர அமைப்பாளராக இருந்த எஸ்.எம்.சந்திரசேனவுக்கு பதிலாக நாமல் ராஜபக்க்ஷவும் காலி மாவட்ட அமைப்பாளராகவிருந்த அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்குப் பதிலாக மொஹான் பிரியதர்ஷன டி சில்வாவும் மாத்தறை அமைப்பாளராக இருந்த காஞ்சன விஜயசேகரவுக்க்குப் பதிலாக நிபுணு ரணவக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கச் சென்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.