24 இலங்கையர்களை குவைத்
பொலிஸார் கைது செய்துள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது X கணக்கில் தெரிவித்துள்ளார்.
"Ethera Api Organisation" இன் குவைத் கிளை ஏற்பாடு செய்திருந்த "Sri Lankan Summer Nights" இசை நிகழ்ச்சியில் வைத்தே இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து குவைத் தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.