மஹாஓயா அரலகங்வில
வீதியில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பஸ்களிலும் பயணித்த 2 ஆண்கள், 12 பெண்கள், 6 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் காயமடைந்து மகாஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹா ஓயாவிலிருந்து அரலகங்வில நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் எதிர்த்திசையில் இருந்து வந்த மற்றுமொரு தனியார் பஸ்ஸும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.