பாராளுமன்றம் அருகே கார்
ஒன்று விபத்தில் சிக்கியதில் காயமடைந்தவர்களில இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (04) காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற வீதியில் உள்ள இராணுவ நினைவிடத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் அதிவேகமாக வந்து வீதியின் மறுபுறம் சென்று வேன் மீது மோதியதில் இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கார் முற்றாகச் சேதமடைந்து இரண்டாகப் பிளந்தது.
விபத்துக்குள்ளான வேன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி நிறுவனத்துகுச் சொந்தமான வாகனம் எனவும் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.