களுத்துறை மாவட்ட மக்கள்,
கட்சி முக்கியஸர்தர்கள் மற்றும் அனைத்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.