ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை
பிளவுபடுத்தியது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மக்கள் அல்ல.
கட்சியைப் பொருட்படுத்தாது தமது தனிப்பட்ட நலன்களுக்காக நிற்பவர்கள் வெகு சிலரே கட்சியை பிளவுபடுத்தினர் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாத இந்த சிலர் பணத்துக்காக கட்சிக்கு துரோகம் செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.