ஜனாதிபதித் தேர்தலில்
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (04) கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.