1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

 (எஸ்.ஆர்.லெம்பேட்)

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்

கடந்த 27 ஆம் திகதி  பட்டதாரி இளம் குடும்பப் பெண் மரியராஜ் சிந்துஜா (27 ) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்துக்கு அன்றைய தினம் விடுதிக்கு பொறுப்பாக இருந்த வைத்தியரின் பொறுப்பற்ற செயற் பாடே காரணம். குறித்த பட்டதாரி இளம் குடும்ப பெண்ணைக் கொலை செய்து விட்டனர். 

அவர்கள் இந்தப் பெண்ணின் மரணத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும்  என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சுகாதார அமைச்சின் (மத்தி) செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

திருமதி மரியராஜ் சிந்துஜா வயது 27 என்பவர் கடந்த மாதம் ஒன்பதாம் திகதி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளார். 11 ஆம் திகதி  தாயும் சேயும் நலமாக வீடு சென்றுள்ளார்.

 ஏழு நாட்களின் பின்னர் தையல் வெட்டுவதற்காக 16   அன்று முருங்கன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். பின்னர் 27 இரவு குருதி பெருக்கு காரணமாக அன்று இரவு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார்.

மறுநாள் 28  காலை 7  மணி வரை எந்த வைத்தியர்களும் பார்வையிடவில்லை.  விடுதிக்கு பொறுப்பான வைத்தியர்கள் தங்கும் விடுதியில் இருந்துள்ளனர். தாதிய உத்தியோகத்தர் வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டும் கூட அவர்கள்  வரவில்லை.

ஆகவே வைத்தியர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டால் அவர் மரணமடைந்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அதுவும் இரவு நேரங்களில் இந்த நிலை தொடர்கின்றது.

உயிருடன் விளையாடும் அசட்டைகள் தொடர்கின்றன. மருத்துவத் தவறு எனும் சட்ட பாதுகாப்பு கவசத்தினால் தினந்தோறும் நாடு முழுவதும் பலர் இறந்து விடுகின்றனர்.

இந்த விடுதிக்கு பொறுப்பாக இருந்த வைத்தியரின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஒரு பட்டதாரி இளம் குடும்ப பெண்ணை கொலை செய்து விட்டனர்.  அவர்கள் இந்தப் பெண்ணின் மரணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

எனவே இந்தச் சம்பவத்தை திட்டமிட்ட குற்ற மனம் உள்ள கொலையாக கருதுகிறோம். பொறுப்பற்ற உத்தியோகத்தர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி