பங்களாதேஷில் இன்று (04)
இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி திரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் இறப்பர் தோட்டாக்களை வீசினர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி (1200 GMT) முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்ததுள்ளது.
இணையச் சேவைகளை முடக்க அரசாங்கத்தைத் தூண்டிய இந்த அமைதியின்மை, பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட தேர்தல்களில் நான்காவது முறையாக வெற்றி பெற்ற பின்னர் ஹசீனாவின் 20 ஆண்டுகால ஆட்சியில் அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனையாகும்.