ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
மாத்தளை மாவட்டக் குழு நேற்று (04) காலை தம்புள்ளையில் மாவட்டத் தலைவர் ஜனக பண்டார தென்னகோன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோர் தலைமையில் கூடியது.
இதன்போது ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
மாத்தளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள், அழைப்பாளர்கள் , முன்னாள் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட இணைப்பு அமைப்புகளின் தலைவர்கள் இந்தக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.