இரத்மலானையில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் இருந்து சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான இரும்புத் தொகுதிகளைத் திருடிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபர்களை இரண்டு இரும்பு தொகுதிகளுடன் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேக நபர்கள் இரண்டு ரயில் பெட்டிகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் இரண்டு திருகு இணைப்புகளைத் திருடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்மலானை மற்றும் பிலியந்தல ஆகிய இடங்களில் வசிக்கும் 22 மற்றும் 29 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களாவர்.