நீதிமன்றத்தை அவமதித்தார்
என்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த மனு இன்று (05) பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நிராகரிக்கப்பட்டது.
மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இணக்கப்பாட்டில் இந்த மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது.
வெலிகம முன்னாள் மேயர் ரெஹான் ஜயவிக்ரமவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.