(எச்.எம்.எம்.பர்ஸான்)
சிறுவன் ஒருவனை வீதியில்
இழுத்துச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனை தாக்கிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (4) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு வீதி நாவலடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
வாகனங்கள திருத்தும் உரிமையாளர் ஒருவர் அவரது சிறுவன் திருடியதாக குற்றம் சுமத்தி இரும்புக் கம்பியை கையில் வைத்தவாறு சிறுவனை வீதியால் இழுத்துச் செல்லும் காட்சியை நபரொருவர் கைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில், சிறுவன் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் வாகனங்கள் திருத்தும் உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.