நீதித்துறை சிறைச்சாலை
விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியின் பின்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயதாச ராஜபக்க்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதன் காரணமாக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்களுக்கு எதிர்க்கட்சி ஆசனங்களை வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, மக்கு எதிர்க்கட்சி ஆசனம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிய வருகிறது.