இலங்கை சிறுவர்களின் நிர்வாணப்
புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை டுவிட்டர் கணக்குகள் ஊடாக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் இன்று (05) நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததுடன் அமெரிக்க அரசாங்கத்தினால் நடத்தப்படும் நிறுவனம் ஒன்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பிய தரவுகளை ஆய்வு செய்தபோது, சிறார்களுக்கு எதிரான கடுமையான பாலியல் துஷ்பிரயோக விடயங்கள் பல தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது, பாரிய பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 4 சிறுவர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதான பரிசோதகர் சாமந்தி ரேணுகா நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கை செய்திருந்தார்.