1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

தனது ஜனாதிபதி வேட்பாளரை நாளை புதன்கிழமை (07) அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல தொகுதிக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
 
இதேவேளை, எதிர்வரும் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விடுத்துள்ள கடிதத்துக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதிலளித்துள்ளார்.
 
ஜூலை 29ஆம் திகதி கட்சியின் அரசியல் பீடத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தானும் அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களும் கட்டுப்படவில்லை என சேமசிங்க எழுத்து மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதற்கமைவாக கட்சி மேற்கொள்ளும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி