கொழும்பு, தெமடகொட ரயில்
பராமரிப்பு பிரிவு ஊழியர் ஒருவர் காணாமல் போனமை காரணமாக ஊழியர்கள் கடமையிலிருந்து வெளியேறியதால் ரயில போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் ரயில்கள் தாமதமடைவதுடன் சில சேவைகள் இரத்துச் செய்யப்படுமெனவும் திணைக்களம் கூறுகிறது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை காலையில் இயக்கப்பட வேண்டிய பொடி மெனிகே ரயில் மற்றும் பதுளை ஒடிஸி ஆகிய ரயில்கள் இதுவரையில் இயங்கவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.