பங்களாதேஷ் எதிர்க்கட்சித்
தலைவர் காலிதா ஷியா உட்பட சிறை தண்டனை அனுபவித்து வரும் அனைத்து எதிர்க்கட்சி அரசியல் முக்கியஸ்தர்களையும் விடுவிக்க வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் போராட்டங்களை அடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்தார், நாட்டை விட்டு வெளியேறினார், மற்றும் நாட்டில் இராணுவம் ஆட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், இராணுவத் தளபதி ஜெனரல் வக்கார் உஸ் ஜமான், கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் இவ்வாறு உத்தரவிட்டார்.
பங்களாதேஷ் தேசிய கட்சி மற்றும் மற்றொரு எதிர்க்கட்சி அரசியல் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி உறுப்பினர்களும் கூட்டத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா தப்பிச் சென்ற பிறகு இடைக்கால அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் தெரிவித்துள்ளது.