அத்துருகிரிய பச்சை குத்தும்
மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவின் சடலத்தின் நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது தொடர்பாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சுமார் 30 பேரிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனைக்காகச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மூலம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொலைச் சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் ஊடகங்களுக்குக் கிடைக்கப்பெற்று அதனை செய்தியாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் குறிப்புகள் மற்றும் உண்மைகளை பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.