காணாமல்போன தெமடகொட
ரயில் நிலைய ஊழியரின் சடலம் மாளிகாவத்தை ரயில்வே பாதையிலுள்ள உள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஊழியரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கிணற்றில் விழுந்த விதம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
குறித்த ஊழியர் காணாமல் போனதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புகையிரத ஊழியர்கள் இன்று (05) காலை தமது கடமைகளை விட்டு வெளியேறியதையடுத்து ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.