தொழிலதிபர் தம்மிக்க பெரேரா
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட காரணங்களலேயே இவ்வாறு முடிவெடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவின் பெயர் நாளை (07) காலை 7.30 மணிக்கு அறிவிக்கப்படவிருந்தது.
கொழும்பில் உள்ள நெலும் பொக்குண திரையரங்கிற்கு முன்பாக விழாவை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த இடத்தை மாற்றி நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டது.