ஜனாதிபதி தேர்தலில்
யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது இறுதித் தீர்மானத்தை எட்டமுடியாத நிலையில் அதன் உயர்பீடக் கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் 14 ஆம் திகதி மீண்டும் உயர்பீடம் கூடியே எடுக்கவுள்ளதாக கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீன் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீன் தலைமையில் இன்று ( 06) இடம்பெற்ற உயர்பீடக் கூட்டத்திலேயே இந்த நிலைமை ஏற்பட்டது.