அத்துரிகிரியவில் உள்ள பச்சை
குத்தும் நிலையத்தில் வைத்து வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைக் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற பஸ்ஸும் கைப்பற்றப்பட்டதாக அத்துரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பஸ் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அது கைப்பற்றப்பட்டு அதுருகிரிய பொலிஸுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.