ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
(மொட்டு) ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற சட்டத்தரணி நாமல் ராஜபக்க்ஷவை பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வு அக்கட்சியின் அதியுயர் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் இன்று (07) காலை பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
நாமல் ராஜபக்க்ஷவின் பெயரை அவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் பொஹொட்டு கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.