ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்
திட்டம் தமக்கு இல்லையென்றாலும் சவாலான நேரத்தில் கட்சியின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிடுவதாகவும் கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ இன்று (7) தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஒருவருக்கு பொருத்தமான 'சூட்' போடுவது தனது பொறுப்பாக மாறியதாகவும், ஆனால் அந்த சூட்டை கட்டாயப்படுத்த முடியாது எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் சக்தியாக மாறும் என்றும் நாமல் ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்தார்