அரசாங்க மருத்துவ அதிகாரிகள்
சங்கத்துக்கும் (GMOA) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் நடந்துள்ளது.
இச்சந்திப்பில் இலங்கையில் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான சங்கத்தின் முன்மொழிவுகள் தேசிய மக்கள் படையிடம் முன்வைக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடனான இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் படையின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, நிர்வாக உறுப்பினர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.