1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமது கட்சி இன்னும் ஐக்கிய

மக்கள் சக்தியுடனேயே இருப்பதாகவும் அந்தக் கட்சியின் கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்று உறுப்பினர்   ரிஷாத் தெரிவித்தார் .

ஜனாதிபதியும் தமது கட்சியின் ஆதரவை கோரியுள்ளதாகவும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் 14 ஆம் திகதி எட்டப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, நேற்றைய கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாமை தொடர்பில் கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீனிடம் தமிழ் லீடர் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'மாவட்ட மட்டத்தில் எமது கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்களின் கருத்தறிந்த பின்னரே ஒரு தீர்மானத்துக்கு வருவது சிறந்தது என உயர்பீட உறுப்பினர்கள் தங்களது ஆலோசனையை முன்வைத்தனர்.

இதன்படியே நாம் செயற்பட தீர்மானித்ததன் காரணமாகவே நேற்று எமது முடிவை அறிவிக்க முடியாமல் போனதாக கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி