மொரட்டுவை முரவத்த பிரதேச
கடற்கரையில் நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (7) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்மலானை ராஜ மாவத்தை வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய எஸ் செல்வவராஜ் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்று (6) பிற்பகல் இரத்மலானை ரயில நிலையத்துக்கு அண்மித்த கடற்கரையில் நீராடியபோது இவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை கடற்படையினரும் பொலிஸாரும் முன்னெடுத்த போதிலும் நேற்று (6) அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
உயிரிழந்தவர் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதுடன் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.