கட்டுநாயக்க விமான நிலைய
பொலிஸ் போதைப்பொருள் பிரிவு, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கணினி சாதனங்களுக்குள மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றின் மதிப்பு ஐந்து கோடியே 11 இலட்சத்து 50,000 ரூபா என அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாயில் இருந்து விமான தபால் பொதி சேவையின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலைக்கு 63 கணினி சாதனங்களில் இந்தப் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
5 கிலோ 112 கிராம் ஐஸ் போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது.