சீதுவை பொலிஸ் பிரிவுக்கு
உட்பட்ட கொடுகொட பொலிஸ் வீதி சோதனை சாவடியில் காரை சோதனையிடச் சென்று போது நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்டின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்தபோது அது வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.
சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சீதுவை திசையிலிருந்து வந்த காரை சோதனையிட முற்பட்டபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்போது, காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்டின் கடமை துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது, துப்பாக்கி வெடித்ததில் அந்த சார்ஜடின்ட் காலிலும் பறிக்க முற்பட்ட நபரின் வயிற்றிலும் துப்பாக்கிச் சூடுபட்டுள்ளது.
பின்னர் இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காரில் பயணித்த பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் உயிரிழந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.