நுரைச்சோலை மாம்புரி பகுதியில்
முச்சக்கரவண்டியும் இரு மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் காயமடைந்த ஐவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுரைசோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுரைசோலை மாம்புரி பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் முச்சக்கரவண்டியும் கல்பிட்டியிலிருந்து பாலாவியா நோக்கிச் சென்றதாகவும் திடீரென முச்சக்கரவண்டி ஒரே நேரத்தில் திரும்ப முற்பட்டதாகவும் அதிவேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டியில் மோதியதாகவும் நுரைச்சோலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.